Powered By Blogger

Saturday, August 7, 2010

நினைவில் நிற்கும் மனிதர்கள்

சமூகப் பிரச்னைகளில் அக்கறையோடு இருப்பவர்களுக்கு முதல் எதிர்ப்பு தற்போதெல்லாம் அவர்களின் பெற்றோர்களிடமிருந்துதான் வருகிறது. அதிலும் குறிப்பாகத் தாய்மார்கள் கண்ணீர் வடித்தேனும் சமூக அக்கறையுடன் செயல்படும் தங்களது பிள்ளைகளை அப்பாதையில் செல்லவிடாமல் அதிகபட்சம் தடுத்து விடுகிறார்கள். இதைப் பார்த்துப் பார்த்து பழகிப்போன நமக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் நடந்ததாக ஒருவரால் கூறப்பட்ட நிகழ்ச்சியைக் கேட்டபோது அப்பாடா இது போன்ற நிலை எல்லாக் காலங்களிலும் நிலவியிருக்கவில்லை என்ற மனதிற்கு இதமான ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஒரு தந்தை தன் மகனுக்கு கிண்டியிலிருந்த பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான மதிப்பெண்கள் இருந்தும், அவர் சென்னையைச் சேர்ந்தவராக இருந்தும் வாரணாசி ஹிந்துப் பல்கலைகழகத்திற்கு அவனை படிக்க அனுப்புகிறார்.

வர்க்க முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்யும் தற்போதைய கல்வி முறைவர்க்க முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்யும் தற்போதைய கல்வி முறை

24.4.2010 அன்று மதுரை காந்தி மியூஸியம் குமரப்பா குடிலில் நடைபெற்ற கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தோழர்.ஜேம்ஸ் ஜோசப் அவர்கள் ஆற்றிய உரையின் சராம்சம்.
நானும் தோழர் ஆனந்தனைப் போல பொது நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அதற்குப் பின் எனது வாழ்க்கை எனும் ஊர்தியின் திசை மாறிவிட்டது. அவ்வாறு மாறிப் பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். முதற்கண் இங்கு நான் வந்தது இந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்று எனது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் எனது பழைய நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டோர் அனைவரிடமும் எனது மன்னிப்பையும் கோர விரும்புகிறேன்.

Friday, August 6, 2010

பொறியியல் கல்லூரிகளில் சேர தகுதி மதிப்பெண் குறைப்பு நடவடிக்கைதமிழக ஆட்சியாளரின் கல்விச் சேவையல்ல;

உயர்கல்வி உண்மையாகவே அரசின் வசம் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் பெருகிவரும் கல்வித்தேவை முழுவதையும் நிறைவேற்ற நிதிஒதுக்கீடு செய்ய முடியாது என்று கருதிய பல்கலைகழக மானியக்குழு புதிய உயர்கல்வி நிலையங்கள் திறப்பதை நிறுத்தியது. அச்சமயத்தில் குறிப்பாக தமிழ்நாடு போன்ற பெரும் ஜீவ நதிகள் ஓடி விவசாயப் பொருளாதாரம் சிறப்பாக விளங்கி பெரும்பான்மையான மக்களை அதில் ஈடுபடுத்தி வைத்திராத மாநிலங்களில் கல்வி மூலம் மட்டுமே தங்களது எதிர்கால வாழ்க்கையினை தீர்மானித்துக் கொள்ள முடியும் என்ற நோக்கில் இருந்த ஏராளமானோருக்கு புது கல்வி நிலையங்கள் திறக்கப்படுவதும் அதன் மூலம் கல்வி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதும் அத்தியவசியமாக இருந்தது.

கேப்பிடலிஸம் : எ லவ் ஸ்டோரிதீயது எதையும் ஒழுங்குபடுத்திப் பராமரிக்க முடியாது அது முடிவுக்குக் கொண்டுவரப்படவே வேண்டும்



தீயது எதையும் ஒழுங்குபடுத்திப் பராமரிக்க முடியாது அது முடிவுக்குக் கொண்டுவரப்படவே வேண்டும்

2008, 2009 களில் தோன்றிய முதலாளித்துவ நெருக்கடி பலரின் கண்களைத் திறந்தது. முதலாளித்துவம் சுதந்திரமான வளர்ச்சியை உறுதி செய்கிறது; அது சுதந்திர வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது; இவ்வாறு எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம் என்பதைப் பேணிப் பராமரிப்பது முதலாளித்துவமே; முதலாளித்துவத்தால் தான் நாம் உலகிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பன போன்ற பிரச்சாரங்களில் மயங்கி சோசலிசம் கம்யூனிசம் ஆகியவை எல்லாம் தீய வார்த்தைகள் என்ற மனநிலையில் இருந்த அமெரிக்க மக்களின் கண்களை குறிப்பாக அது பெரிதும் திறந்துள்ளது.

நடத்தப்படுவது செம்மொழித் தமிழுக்கு மாநாடு

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததாகவும், மூன்று சங்கங்கள் மதுரையில் இருந்ததாகவும் தமிழ் இலக்கிய வரலாறு கூறுகிறது. அந்த சங்கங்களின் மூலம் தமிழ் வளர்ந்ததோ இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் தற்போது செயல்பட்டு வரும் பல எழுத்தாளர் சங்கங்களால் தமிழ் இலக்கியம் அப்படியயான்றும் பெரிதாக வளர்ந்துவிடவில்லை.
ஏனெனில் ஒரு இலக்கியவாதியின் எழுத்துக்களைப் பொறுத்தவரை மிகச் சிறந்த நீதிபதிகள் வாசகர்களே. எழுத்து முழுக்க முழுக்க வணிக மயமாகிவிட்ட இன்றையச் சூழ்நிலையிலும் கூட நல்ல எழுத்துக்களைப் படிக்கவும் பாராட்டவும் வாசகர்கள் இருக்கவே செய்கின்றனர். ஏனெனில் நல்ல எழுத்து உண்மையை எடுத்துக் கூறுவதாக இருப்பதால் அதை எளிதில் அழிக்க முடியாது. ஏனெனில் அது எத்தனை எதிர்மறைச் சூழ்நிலையிலும் தன் வலு முழுவதையும் திரட்டித் தன்னை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவே செய்யும். அது தான் உண்மையின் தன்மை. அப்படிப்பட்ட உண்மையை உயர்த்திப் பிடிக்கும் எழுத்துக்களை வரவேற்கும் சிலராக ஆனால் மேலான சிலராக இருக்கும் வாசகர்களால் பாராட்டப் பெற்ற எழுத்தாளர் சங்க எழுத்தாளர் எவரின் படைப்புகளும் சமீப காலங்களில் வரவில்லை.

அறிவு சார்ந்த மனோதிடத்தைக் கொண்ட கல்விமான்களாக இருங்கள்; இந்த சமூகத்திற்குக் கல்வி கற்றோரின் தரமான தலைமையைத்தர முன்வாருங்கள்

பேராசியர் டாக்டர். அரங்கராமானுஜம் அவர்களின் உரை

இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழக இயக்குனர்களில் ஒருவரும் தேர்ந்த கல்விமானும் ஆன டாக்டர் பெ.அரங்கராமானுஜம் அவர்கள் கல்விக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராகக் கலந்து கொண்டு முன்வைத்த கருத்துக்கள்:

ஏழை மாணவருக்குத் தரமான கல்வி மறுக்கப்படுவதைக் கண்டித்துக் கருத்தரங்கம்ஏழை மாணவருக்குத் தரமான கல்வி மறுக்கப்படுவதைக் கண்டித்துக் கருத்தரங்கம்

ஏழை மாணவருக்குத் தரமான கல்வி மறுக்கப்படுவதைக் கண்டித்துக் கருத்தரங்கம்

கல்வி மனித குலத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் மகத்தான பங்கினை ஆற்றியது. அந்தநிலை இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குச் சீரழிந்துள்ளது. அதன் பரிமாணம், உள்ளடக்கம் இரண்டிலுமே அது அடைந்துள்ள சீர்கேடு வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவிற்கு உள்ளது.

ஜாதிவாரி மக்கட்தொகைக் கணக்கெடுப்பு

உழைக்கும் மக்களை வர்க்கப்பார்வையற்றவர்களாக்கி ஜாதிய வட்டத்திற்குள் கட்டிப்போட முயலும் முதலாளித்துவச் சதி

மத்திய அரசு தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது. பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் 2011ம் ஆண்டிற்குள் முடிக்க உத்தேசித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் கடந்த கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டது.

கிரேக்க நாட்டின் நெருக்கடி முன்னிறுத்தும் படிப்பினை

பொருளுக்கு அழிவில்லை; அதைப் போல் முதலாளித்துவ நெருக்கடிக்கும் தீர்வில்லை

சாண் ஏறினால் முழம் வழுக்கும் என்பதை ஒத்த விதத்தில் இன்று உலக முதலாளித்துவப் பொருளாதாரம் உள்ளது. 2008, 2009களில் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி எடுத்த உலகப்பொது நெருக்கடியில் இருந்து முதலாளித்துவப் பொருளாதாரங்கள் மீண்டு வருவதாக ஒருமித்த குரலில் முதலாளித்துவ ஊடகங்கள் கூறிவந்தன. ஆனால் உண்மையில் இன்றுவரை உலகப் பொருளாதாரங்கள் எவையும் குறிப்பிடத்தக்க மீட்சி எதையும் பெறவில்லை.

ஆகஸ்டு 5 மாமேதை எங்கெல்ஸ் நினைவுதினம்

உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைத் தத்துவத்தை உலகிற்கு வழங்கிய இருபெரும் மேதைகளில் இரண்டாவது இடத்தில் நின்று நிலவுபவர் தோழர்.எங்கெல்ஸ் ஆவார். ஆகஸ்டு 5 அவரது நினைவுதினம் ஆகும். 1895 ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் நாளில் உடல் உபாதை எதனாலும் சிரமப்படாமல் அம்மேதை நினைவிழந்த நிலையில் உயிர் நீத்தார்.

மனிதர்களுக்கிடையில் நிலவும் அத்தனை உறவுகளிலும் மிகவும் மேன்மையானது தோழமையுணர்வு. அதன் சின்னமாகவும், சிகரமாகவும் ஏன் அதன் இலக்கணமாகவும் விளங்கியவை மாமேதைகள் மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருக்கும் இடையில் நிலவிய நட்பும் தோழமையும்.

போபால் விசவாயு வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் யதார்த்தம்

“ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அழிந்தாலும் கூடப் பரவாயில்லை; ஒரு பணக்காரன் அல்லது அதிகாரி கூடப் பாதிக்கப்படக் கூடாது”

விபத்து நடந்து 26 ஆண்டுகளுக்குப் பின்பு போபால் விசவாயுக் கசிவு வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கும் உயிரினங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலின் அழிவிற்கும் மாசுபடுதலுக்கும் காரணமாக இருந்த அந்த துயர நிகழ்வின் குற்றவாளிகள் 7 பேருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உடனேயே அவர்கள் ஜாமின் கொடுத்து சிறைக்குச் செல்லாமல் வெளியிலும் வந்துவிட்டனர். இந்த விபத்திற்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்திய பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு மற்றும் இந்திய அரசின் கூட்டு முதலீட்டில் உருவான நிறுவனம் ஆகும்.

சந்தைச் சரக்காகக் கல்வியைத் தரம் தாழ்த்திக் கொண்டிருக்கும்,

கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தோழர் ஆனந்தன் ஆற்றிய உரையின் சாராம்சம்:

இந்தக் கருத்தரங்கில் பல கல்விமான்கள் கலந்து கொண்டுள்ளனர். கல்வி குறித்த அவர்களின் கருத்துக்கள் இரு தன்மைகளைக் கொண்டவையாக இருக்கும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன. ஒன்று கல்வி என்றால் என்ன என்பது குறித்த சித்தாந்தபூர்வக் கருத்தோட்டம். மற்றொன்று தற்போது நடைமுறையில் வழங்கப்படும் கல்வி எவ்வாறு முன்பிருந்ததைக் காட்டிலும் சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது; அதனைக் குறைந்த பட்சம் முன்பிருந்த அளவிற்காவது காப்பாற்ற வேண்டும் என்ற கண்ணோட்டம். இவ்விரண்டில் முன்னதை கல்வியாளர்களின் கருத்துக்கே முழுமையாக விட்டுவிட்டுப் பின்னதை மட்டும் எடுத்துப் பேசுவது எனக்குச் சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன்.