Powered By Blogger

Thursday, July 21, 2011

சமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் ஆளும் வர்க்கச் சதி

கல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.


சமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் ஆளும் வர்க்கச் சதி

கல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.

சோசலிச சமூக அமைப்பு உருவாக்கிய மாமனிதன் யூரி ககாரின்

யூரி ககாரின்: சோசலிச சமூக அமைப்பு உருவாக்கிய மாமனிதன் விண்வெளியில் பறந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன
இந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதியுடன் விண்வெளியில் புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி மனிதன் முதன்முதலாகப் பயணிக்கத் தொடங்கிய 50-வது ஆண்டு நிறைவடைகிறது. அவ்வாறு பயணித்த முதல் மனிதன் சோவியத் யூனியனைச் சேர்ந்த யூரி ககாரின் ஆவார். உலகெங்கும் அந்த நாள் மனிதனின் மகத்தான சாதனை நாளாகப் பெரிதும் நினைவுகூரப் படுகிறது.


Wednesday, July 20, 2011

தமிழகத் தேர்தல் முடிவுகள்: உழைக்கும் வர்க்க அணிகளிடம் முன்னிறுத்தியுள்ள வாய்ப்புகள்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்தல்களின் மூலமாக மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப் படுவதில்லை. மேலும் மக்கள் முழுமையான சுதந்திர மனநிலையுடன் அவர்களுடைய பிரச்னைகளை மனதில் வைத்து இந்த அமைப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதுமில்லை.


தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு காரணம் என்ன?

தொழிலாளர் இயக்கமும் சோசலிசமும் இல்லாமற் போயிருப்பதே தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எல்லாம் காரணம் -மேதினக் கூட்டத்தில் தோழர் ஆனந்தன் உரை சி.டபிள்யு.பி., உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் ஆகிய அமைப்புகளின் சார்பாக இந்த ஆண்டின் மேதினம் திருத்தங்கல் ஐயப்பன் அரங்கத்தில் 22.05.2011 மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு கூட்டம் மூலமாகச் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமையேற்றார்.

சட்டங்கள் மட்டுமே ஊழலைத் தடுத்து விடாது

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்


இந்திய அரசியல் அரங்கில் சமீப காலத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கப் போக்கு முழுவீச்சுடன் தலைதூக்கி வருகிறது. இந்த இயக்கப் போக்கினைத் தொடங்கி வைத்தது கம்யூனிஸ்ட் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சிகளோ அல்லது பிரதான எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யோ அல்ல.

மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்

மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்



நாகர்கோவில்
மார்க்சிய சிந்தனை மையத்தின் கம்யூனிஸ்ட் அறிக்கை மீதான மாதம் ஒன்று என்ற அடிப்படையில் 3 முறை நடந்த பின் விவாதங்களின் சாரம்சத்தைத் தொகுத்து வழங்கும் 4-வதுகட்ட விவாதக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கடந்த ஜீன் 19-ம் நாள் நடைபெற்றது.


ஆசிரியர் சமூகம் அன்றும் இன்றும்

70-களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரியின் ஆங்கில இலக்கியத் துறையினால் அப்போது நடத்தப்பட்டு வந்த வாய்ஸ் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் என்ற இதழில் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஒருவர் அவரிடம் பயிலும் ஒரு மாணவன் குறித்துக் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். பொதுவாக ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் பேசுவதற்கு நிறைய இருக்கும். ஆனால் அப்போது மாணவர் குறித்த உயர்வான வி­யங்களையும் ஆசிரியர் தயக்கமின்றிப் பேசுவர் என்ற நிலையும் இருந்தது. இது அக்கல்லூரியில் கல்வி ஒரு வாழ்க்கையாக இருந்ததைப் பறைசாற்றியது.

அறிவைப் பரப்ப வேண்டிய ஆசிரியர்கள் அறிவிற்கே முட்டுக்கட்டை ஆகலாமா?

அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் பொறுப்புள்ள பெற்றோர் சேர்க்கத் தயங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் அங்கு ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை என்பதே. இன்றைய உலகமயப் பின்னணியில் ஆங்கில அறிவு வேலைச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. அதனைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களாக அப்பள்ளி மாணவர்கள் இருப்பதால் அவர்கள் மேல் படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர்.

வானம்: சகஜமாகிவிட்ட சமூக அபத்தங்களின் படப்பிடிப்பு

“பொய் சொல்றது ஈஸி, உண்மைய சொல்றது தான் கஷ்டம்”


“இந்த உலகத்தில் இரண்டே ஜாதிதான் உண்டு. ஒன்னு பணக்கார ஜாதி இன்னொன்னு ஏழை ஜாதி”


“இங்க யாரு போலீஸ் யாரு திருடன்னே தெரியல”


இதுபோன்ற வசனங்கள் எங்கும் எவரிடமும் எடுபடும். ஏனெனில் இவை இன்று நிலவும் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை.

கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் அசான்ஜ்

அடக்குமுறைகள், தாக்குதல்கள், பொய் வழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் அசான்ஜ்ஜனநாயக அமைப்பில் அதாவது முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் பத்திரிக்கைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகின்றன. மனித குலத்தின் வளர்ச்சிப் போக்கில் தோன்றிய சமூக அமைப்புகள் அனைத்திற்கும் சில அடிப்படை முழக்கங்கள் இருந்தன. நிலவுடமை அமைப்பில் ஆண்டவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற முழக்கம் இருந்தது.


மாறிவரும் இந்திய வெளிநாட்டுக் கொள்கையும் மாறாத இந்திய இடதுசாரிகளின் பார்வையும்

உலகம் முழுவதிலும் உள்ள ஏறக்குறைய 60 நாடுகளில் ஆட்சியாளர்களின் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் செயல்பாடுகள், போக்குகள் விக்கிலீக்கின் கேபிள் கசிவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளன.


அமெரிக்கா பல நாடுகளின் வி­ஷயங்களில் உள்நோக்குடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் விக்கிலீக் மூலம் அம்பலப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தாத சமச்சீர் கல்வியால் சமச்சீர் வருமா?

அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தையும் அரசுப்பள்ளி ஆசிரியரின் கற்பிக்கும் திறனையும் மேம்படுத்தாமல் கல்வியின் மேம்பாடு குறித்துப் பேசுவது ஏமாற்று வேலையே இந்த ஆண்டு அமல் செய்யப்படவிருந்த சமச்சீர் கல்விக் கொள்கை பதவிக்கு வந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.