Powered By Blogger

Wednesday, May 26, 2010

உண்மையான பெண் விடுதலையை சாதிக்க உறுதி பூணுவோம் - சர்வதேச மகளிர் தின நூற்றாண்டை அனுஷ்டிப்போம்



-தோழர் சங்கர் சிங்


மார்ச் 8 ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அங்கீகரித்திருப்பதனால் உலகின் பல பகுதிகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இத்தினம் சிறப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டது போல் தோன்றுகிறது. பின் தங்கிய மற்றும் புதிதாக வளர்ந்து வரும் ஆசிய , ஆப்பிரிக்க , லத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ஒப்பீட்டளவில் நிலவும் பெண்களின் பின்தங்கிய நிலைமையும் சமூக வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சம அந்தஸ்து இல்லாமையும் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் இன்றைய சூழலில் , பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளின் பல்வேறு அம்சங்களை உயர்த்திப் பிடிக்கும் தீர்க்கமான நோக்கத்துடன் சர்வதேச பெண்கள் தினத்தை அனுஷ்டிப்பது அளவு கடந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

சுதந்திரத்தை அதிபட்சம் அனுபவிக்க வேண்டிய வயதில் கூனிக்குறுகி நிற்கும் நிலைக்குத் தள்ளப்படும் மாணவர் சமூகம்

மனிதன் தோன்றிய நாள் முதல் அவன் நடத்தும் போராட்டங்கள் அனைத்துமே ஒரு பொதுவான இலக்கைக் கொண்டவையாக உள்ளன. ஆரம்ப கால மனிதனை ஏறக்குறைய விலங்கோடு விலங்காக அவன் இருந்ததால் இயற்கை அடிமைப் படுத்தியிருந்தது. இயற்கைச் சூழ்நிலை அவன் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் வரை மட்டுமே அவனால் அச்சூழ்நிலையில் வாழ முடிந்தது. அது ஏதுவாக இல்லாத போது ஏதுவான இயற்கைச் சூழ்நிலையை நோக்கி தன்னை காத்துக் கொள்வதற்காக அவன் ஓட வேண்டியிருந்தது.

தாராளவாதக் கல்வி உருவாக்கிய உன்னதத் தன்மைகளை அழித்தொழிக்கும் பாதையில் கல்வியில் தலை தூக்கிவரும் முதலாளித்துவத் தனியார்மயம்

நிலவுடமை அமைப்பைப் புறந்தள்ளி முதலாளித்துவ அமைப்பு உருவானபோது அது சமூகத்திற்கு வழங்கிய மிக முக்கிய வழங்கல் கல்வியை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பரவலாக்கியதாகும். சமூகத்தின் எந்தெந்த அம்சங்கள் பழைய நிலவுடமை அமைப்பு முறையின் கருத்து ரீதியான தூண்களாக விளங்கினவோ அவற்றையயல்லாம் அடித்து நொறுக்கும் விதத்தில் அந்தக் கல்விமுறை அமைந்தது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை நடத்துவதற்கு வேண்டிய விதத்தில் விஞ்ஞானம் , தொழில் நுட்பம் , கணக்குப்பதிவியல் ஆகியவை சார்ந்த கல்வியை பலருக்கும் வழங்குவதற்காக அன்று நடைபெற்ற கல்விப் பரவலாக்கல் நிலவுடமை அமைப்பின் மிச்சசொச்சங்களையும் இல்லாமல் செய்து, முதலாளித்துவ அமைப்புமுறை நிலையாக நிற்கும் வகையில் ஒரு பலமான அஸ்திவாரத்தை அமைத்தது. முதலாளித்துவ உற்பத்தி முறையோடு நேரடியாகத் தொடர்பு கொண்ட விஞ்ஞான , தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளோடு வரலாறு , பொருளியல் , தர்க்கவியல் , தத்துவம் , சமூகவியல் போன்ற பல பாடப் பிரிவுகளையும் அதன் கல்வித்திட்டத்தில் கொண்டு வந்தது.

லாப நோக்க உற்பத்தி முறை உருவாக்கியுள்ள உணவுப்பொருள் விலையேற்றம்

அடிப்படையில் அரசின் கொள்கைகள் சார்ந்ததல்ல - அதனை
எதிர்த்த பாவனைப் போராட்டங்கள் பலனெதையும் தரப்போவதில்லை.

முன்னெப்போதும் கண்டிராத உணவுப் பொருள் விலையேற்றம் தற்போது நடுத்தர, பாடுபடும் மக்களை வாட்டிவதைத்துக் கொண்டுள்ளது. அதை மையமாக வைத்து சாதாரண மக்களிடையே தோன்றியுள்ள கொந்தளிப்பு மனநிலைக்கு வடிகால் அமைத்துக் கொடுக்கும் விதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல இயக்கங்களை அறிவித்துக் கொண்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இப்பிரச்னை பெரிதாக எழுப்பப்பட்டு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அது பெரும் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. பிரதம மந்திரி இதனையயாட்டி முதலமைச்சர்கள் மாநாடு ஒன்றை கூட்டி விலை உயர்வை கட்டுப்படுத்து வதற்கான ஆலோசனைகளைக் கேட்டுள்ளார். ஆலோசனைகள் வருவதற்குப் பதிலாக அக்கூட்டத்தில் மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு மத்திய அரசும் அதன் கொள்கைகளுமே விலை உயர்விற்குக் காரணம் என்ற கருத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் புரட்சி தினத்தின் வரலாற்று முக்கியத்துவமும் - அம்சங்களும்


சென்ற இதழில் வெளிவந்த தோழர் சங்கர் சிங்கின்
நவம்பர் தின உரையின் இறுதிப்பகுதி.

...ஆனால் உண்மையில் நடந்ததோ தன்மையிலும் விளைவிலும் முற்றிலும் வேறாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னரும் அதன் பின்னரும் பாசிஸ அபாயத்தை தடுக்கவும் தோற்கடிக்கவும் வேண்டிய வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்ட அவசரத் தேவையினால் உந்தப்பட்ட உலகம் முழுவதுமிருந்த கம்யூனிஸ்ட்கள் அப்போராட்டத்தில் அதிக முனைப்புள்ள தலைமையான சக்தி என்ற அடிப்படையில் எல்லா இடங்களிலும் வெகுஜன மற்றும் கட்சி அமைப்புகளை விரிவுபடுத்துவதில் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறு விரிவு படுத்துவதில் கட்சி , வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளாலும் நடத்தப்படும் பேரணிகள் மற்றும் இயக்கங்களும் அளவில் எவ்வளவு பெரிதாக இருக்க முடியுமோ அவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஒரு பக்கத்திற்கு கொடுக்கப்பட்ட அளவுக்கதிகமான கூடுதல் அழுத்தத்தின் விளைவு பங்கெடுத்துக் கொண்ட கட்சிகள் மற்றும் வெகுஜனங்களின் தத்துவார்த்த தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற அம்சத்தில் அளவுக்கதிகமாக குறைந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதில் போய் முடிந்தது. சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தில் ஒவ்வொரு வியத்திலும் தலைமையை அப்படியே குருட்டுத்தனமாக பின்பற்றும் காப்பியடிக்கும் போக்கும் இயந்திர கதியிலான சிந்தனை முறையும் எழத் தொடங்கி அதன் அபாயகரமான விளைவாக , தலைமைக்கும் தலைமைதாங்கப் படுபவர்களுக்கும் இடையிலான இயக்கவியல் உறவு எல்லா மட்டங்களிலும் ஒரு வகையான மேலதிகாரி கீழ்ப்படிபவர் உறவாக மாறியது.

முதலாளித்துவச் சுரண்டலின் பல பரிமாணங்களைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் அங்காடித் தெரு


பொருள் முதல்வாதமும் கருத்து முதல்வாதமும்

பொருள் முதல்வாதம் சொல்கிறது மனிதனின் சிந்தனையும் கருத்துக்களும் அவனைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழல், சமூகம் அவற்றில் நடக்கும் இயக்கங்கள், நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களின் பிரதிபலிப்பே என்று. அதாவது நான் என்ற பொருளாளாகிய ஒருவன் அவனிடம் இருக்கும் மூளை என்கிற பொருளாளாகிய ஒன்றைக் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள சூழலை மையமாக வைத்து பிரதிபலிப்பதே சிந்தனை என்பது பொருள் முதல்வாதிகளின் வாதம். ஆனால் கருத்து முதல்வாதிகளோ நான் சிந்திக்கிறேன் அதனால்தான் நான் இருக்கிறேன்; அதாவது நான் என்பதைவிடவும் என் சிந்தனைதான் முதன்மையானது என்று கூறுவர்.

அரசியல் புரட்சியின் முன்னோடியாகும் கலாச்சாரப் புரட்சி

பாஸிசத் தன்மைவாய்ந்த தனிநபர்வாத , லும்பன் கலாச்சாரப் போக்குகளுக்கெதிரான போரட்டத்தை சமூகத்தை ஜனநாயக மயப்படுத்தும் கலாச்சாரப் போராட்டங்களோடு இணைக்க வேண்டும்

இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படக் கூடிய கட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் ஒன்றாயிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்தவையே. நுணுகிப் பார்த்தால் அவை இத்தனை பிரிவுகளாக பிரிந்து கிடப்பதற்கு சரியான காரணம் எதுவுமே இல்லை. ஏனெனில் இக்கட்சிகள் அனைத்திலும் இந்திய அரசு அதிகாரம் எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்களின் கையில் உள்ளது என்ற வரையறையில் அடிப்படையான வேறுபாடு என்பது எதுவும் கிடையாது.

முதலாளித்துவ உற்பத்தி நோக்கங்களுக்கு உகந்த கொள்கைகளை மாறிவரும் சமூகத் தேவைக்கானதென முன்வைக்கும் அரசு

மாறிவரும் காலத்திற்குத் தகுந்த மாறுதல்களை கல்வியில் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் பல கருத்துக்கள் , பல கொள்கைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வி அறிவைப் பெறுவதற்காகவே; கல்விக்கும் வேலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்ற முழக்கம் ஒரு சமயம் முன் வைக்கப்பட்டது. அந்தக் கருத்து முன் வைக்கப்பட்ட போது பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்தவர் கூறினார் : படித்துவிட்டு வேலையில்லாதிருப்பவர்கள் வெடிகுண்டுக்கு சமமானவர்கள் என்று.

தியாகி பகத்சிங்கின் 79 வது நினைவு தினம்




தியாகி பகத்சிங்ன் 79வது நினைவுதினம் இந்த ஆண்டு சி.டபிள்யு.பி. மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளால் உரிய விதத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஆனைக்கூட்டம் மற்றும் மாதாங்கோவில் பட்டியிலும் மதுரை மாவட்டம் சமயநல்லூரிலும் மார்ச் 23 அன்று நினைவு ஸ்தூபி எழுப்பப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மார்ச் 28 அன்று சமயநல்லூரில் மிகுந்த கலை உணர்வுடன் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு மாணவர் ஜனநாயக இயக்கத்தைச் சார்ந்த தோழர்.ம.வினோத் குமார் தலைமை ஏற்றார். சி.டபிள்யு.பி. மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளின் தோழர்களான மாற்றுக் கருத்து ஆசிரியர் தோழர்.த.சிவக்குமார் , உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர்.வரதராஜ் , சி.டபிள்யு.பின் சமயநல்லூர் கிளை அமைப்பாளர் தோழர்.ராமநாதன் , அச்சகத் தொழிலாளர் சங்க செயலாளர் தோழர்.செல்வராஜ் , பட்டாசுத் தொழிலாளர் சங்க செயலாளர் தோழர்.தங்கராஜ் , ஆகியோருடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் தோழர்.பகத்சிங் மற்றும் அ.இ.அ.தி.மு.கவைச் சேர்ந்த திரு செ.மலையாளம் ஆகியவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.