Powered By Blogger

Tuesday, December 6, 2011

சுப்ரமணியபுரம்: 80களின் காலக் கண்ணாடி


எந்த ஒரு கலைப்படைப்பும் தன் காலகட்டத்திற்கும், அக்காலகட்டத்தின் சமூக வாழ்க்கைக்கும் உண்மையானதாக இருந்தால் அது கதையாக இருக்கும் போது அதை எழுதியவரோ அல்லது திரைப்படமாக இருந்தால் அதை எடுத்தவரோ கூட வெளிப்படையாக கூற முன்வராத பல விஷயங்களை படிப்பவர் அல்லது பார்ப்பவர் மனதில் ஏற்படுத்துவதாக அமையும்.

Thursday, December 1, 2011

எழுத்தாளர் கணேசலிங்கனுடனான நமது சந்திப்பு

மார்க்சிய விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பார்வை கொண்டவரும் அவ்வழியில் செவ்வானம், சடங்கு, நீண்டபயணம் போன்ற தலைசிறந்த நவீனங்களை எழுதியவரும், குந்தவைக்கு கடிதங்கள், குமரனுக்கு கடிதங்கள், மான்விழிக்கு கடிதங்கள் போன்ற நூல்கள் மூலம் மார்க்சிய சித்தாந்தத்தை எல்லோரும் படிக்கும் விதத்தில் எளிய முறையில் எடுத்துச் சொன்னவரும், இன்றைய காலகட்டத்தில் தலைசிறந்த மார்க்சிய ரீதியிலான தமிழ் எழுத்தாளராக விளங்குபவருமான செ. கணேசலிங்கன் அவர்கள் 05-06-2008 அன்று மதுரைக்கு வந்திருந்தார்.

Friday, November 18, 2011

இடதுசாரி அங்கிக்குள் ஒளிந்திருக்கும் ஜாதியம்


        (மாற்றுக்கருத்து  15 செப்டம்பர் - 14 நவம்பர், 2008)  

இடதுசாரி ஞானஸ்நானம் வழங்கும் மதகுருமார்களாக தங்களைத் தாங்களே  வரித்துக் கொண்டு, சிற்றிதழ் நடத்துபவர்கள், பின்நவீனத்துவவாதிகள் என்ற பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்ளும் பலர், தமிழகத்தில் இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற ஒளிவட்டம் பின்னால் சுழல வலம்வந்து கொண்டுள்ளனர். ஒரு காலத்தில் வெறும் அரவமாக ஒலித்த அவர்களின் குரல்கள் தற்போது பேரிரைச்சலாக உருவெடுத்துள்ளன.  அதற்கு காரணம் அவர்களின் குரல் வலிமை பெற்றுவிட்டது, அதனால் அதன் எதிரொலி அதிகமாகிவிட்டது என்பதல்ல.  தங்களது பத்திரிக்கைகளின் பக்கங்களில் 25 சதவீதத்தை விளம்பரங்களுக்கும் 60 சதவீதத்தை சினிமா மற்றும் சினிமா நட்சத்திரங்கள் குறித்த செய்திகளை எழுதி நிரப்பவும் பயன்படுத்தும் பிரபல பத்திரிக்கைகளும் கூட இதுபோன்ற எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் எழுதுவதற்கென தங்களது இணை இதழ்களில் வாய்ப்பளிக்கின்றனர். அவை அவ்வாறு வாய்ப்பளிப்பதற்கான காரணம், இடதுசாரி சிந்தனைகளின் மேல் அந்த பத்திரிக்கைகளுக்கு திடீரென ஏற்பட்டுவிட்ட புதிய காதலா அல்லது அதுவும் ஒரு வித்யாசமான வியாபார யுக்தியா என்பது போன்ற வி­யங்களுக்கு நாம் பின்னர் வருவோம்.

Sunday, November 13, 2011

குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக விளையாட்டை ஆக்கிவிட்ட முதலாளித்துவம்

                    2007 ,மே மாதத்தில் வெளியான கட்டுரை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 ஆட்டத்தில் பங்கேற்க இயலாமல் அடுத்தடுத்து வங்கதேச இலங்கை அணிகளிடம் தோற்று இந்திய அணி போட்டியை விட்டு வெளியேறிவிட்டது. அது விளையாட்டு ரசிகர்களிடையே நமது அணி வீரர்களுக்கு எதிரான கோபத்தை தூண்டி விட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக மகேந்திரசிங் தோனி போன்ற வீரர்களுக்கு மாநில அரசாங்கம் வீடு கட்ட இடம் வழங்கியது. அந்த இடத்தில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த வீடு இந்த முறை அவர் சரியாக விளையாடததால் ஆத்திரமடைந்த ரசிகர்களால் இடிக்கப்படும் காட்சி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் நமது வீரர்கள் நாடு திரும்ப வேண்டியிருந்தது.

Monday, November 7, 2011

எஸ்.யு.சி.ஐ - யும் எக்ஸ்பர்ட் கமிட்டியும்

2007 ,மே மாதத்தில் வெளியான கட்டுரை
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தைக் கூட்டுவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்கத் தவறும் கேரள அரசின் செயல் குறித்து அறிக்கை ஒன்றை எஸ்.யு.சி-ஐ கட்சி வெளியிட்டுள்ளது. இப்பிரச்சனையைத் தீர்க்க சர்வதேச தரம் வாய்ந்த நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் அணையின் உயரத்தைக் கூட்டுவது அல்லது வேறு அணை கட்டுவது போன்ற அனைத்து விஷயங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

Thursday, November 3, 2011

சி.பி.ஐ (எம்)ன் சிவப்பு முகமூடியை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த சிங்கூர், நந்திகிராம் நிகழ்வுகள்

2007 மே மாத வெளியீடு
“உழுபவனுக்கே நிலம் சொந்தம்”
“டாடா பிர்லா போன்ற 75 ஏகபோக குடும்பங்களின் ஆட்சியை அனுமதியோம்”.
“உண்டு கொழுத்தவன் மாடியிலே உழைத்துக் கொடுத்தவன் வீதியிலே சட்டங்கள் எல்லாம் ஏட்டினிலே இந்தச்
சண்டாளர்களின் ஆட்சியிலே.”
- இவையெல்லாம் சி.பி.ஐ (எம்) கட்சியின் பல ஊர்வலங்களில் பலமுறை முழங்கப்பட்டு பலராலும் கேட்கப்பட்ட முழக்கங்கள். இவை முழங்கப்பட்ட தொனியையும், முழங்கியவர்களிடம் இருந்த உணர்ச்சிப் பெருக்கையும் அப்போது கேட்டவர்கள் இந்த முழக்கங்களில் உள் பொதிந்திருக்கும் கொள்கைகளிலிருந்து என்றேனும் இக்கட்சியினர் தடம்புரளுவர் என்று எண்ணியிருப்பார்களா என்றால் நிச்சயம் எண்ணியிருக்கமாட்டார்கள். அத்தனை உணர்ச்சிப் பெருக்கு, அத்தனை அரசியல் வேகம்.

ஜாதியம் இன்றைய இந்திய சமூக அமைப்பின் அடிப்படையான முரண்பாடல்ல என்பதைத் தோலுரித்துக் காட்டும் உத்திரப்பிரதேச தேர்தல்

2007 மே மாத வெளியீடு
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்தமுறை கட்சிகளின் கூட்டணி எதுவும் அந்த மாநிலத்தில் ஏற்படவில்லை. அங்கு செயல்படும் முக்கிய கட்சிகள் அனைத்துமே தனித் தனியாகவே போட்டியிட்டன. அதற்குப் பதிலாக கட்சிகள் ஜாதிகளின் ஆதரவை வித்தியாசமான வழிகளில் பெறமுயன்றன. வழக்கமாக உயர் ஜாதியினர் என்று கூறப்படும் பிராமணர்களின் ஆதரவு ஹிந்துத்வா கட்சியான பி.ஜே.பிக்கே செல்லும் என்ற எதிர்பார்ப்பே பலரிடமும் இருந்திருக்கும்.

Thursday, July 21, 2011

சமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் ஆளும் வர்க்கச் சதி

கல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.


சமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் ஆளும் வர்க்கச் சதி

கல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.

சோசலிச சமூக அமைப்பு உருவாக்கிய மாமனிதன் யூரி ககாரின்

யூரி ககாரின்: சோசலிச சமூக அமைப்பு உருவாக்கிய மாமனிதன் விண்வெளியில் பறந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன
இந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதியுடன் விண்வெளியில் புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி மனிதன் முதன்முதலாகப் பயணிக்கத் தொடங்கிய 50-வது ஆண்டு நிறைவடைகிறது. அவ்வாறு பயணித்த முதல் மனிதன் சோவியத் யூனியனைச் சேர்ந்த யூரி ககாரின் ஆவார். உலகெங்கும் அந்த நாள் மனிதனின் மகத்தான சாதனை நாளாகப் பெரிதும் நினைவுகூரப் படுகிறது.


Wednesday, July 20, 2011

தமிழகத் தேர்தல் முடிவுகள்: உழைக்கும் வர்க்க அணிகளிடம் முன்னிறுத்தியுள்ள வாய்ப்புகள்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்தல்களின் மூலமாக மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப் படுவதில்லை. மேலும் மக்கள் முழுமையான சுதந்திர மனநிலையுடன் அவர்களுடைய பிரச்னைகளை மனதில் வைத்து இந்த அமைப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதுமில்லை.


தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு காரணம் என்ன?

தொழிலாளர் இயக்கமும் சோசலிசமும் இல்லாமற் போயிருப்பதே தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எல்லாம் காரணம் -மேதினக் கூட்டத்தில் தோழர் ஆனந்தன் உரை சி.டபிள்யு.பி., உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் ஆகிய அமைப்புகளின் சார்பாக இந்த ஆண்டின் மேதினம் திருத்தங்கல் ஐயப்பன் அரங்கத்தில் 22.05.2011 மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு கூட்டம் மூலமாகச் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமையேற்றார்.

சட்டங்கள் மட்டுமே ஊழலைத் தடுத்து விடாது

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்


இந்திய அரசியல் அரங்கில் சமீப காலத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கப் போக்கு முழுவீச்சுடன் தலைதூக்கி வருகிறது. இந்த இயக்கப் போக்கினைத் தொடங்கி வைத்தது கம்யூனிஸ்ட் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சிகளோ அல்லது பிரதான எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யோ அல்ல.

மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்

மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்



நாகர்கோவில்
மார்க்சிய சிந்தனை மையத்தின் கம்யூனிஸ்ட் அறிக்கை மீதான மாதம் ஒன்று என்ற அடிப்படையில் 3 முறை நடந்த பின் விவாதங்களின் சாரம்சத்தைத் தொகுத்து வழங்கும் 4-வதுகட்ட விவாதக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கடந்த ஜீன் 19-ம் நாள் நடைபெற்றது.


ஆசிரியர் சமூகம் அன்றும் இன்றும்

70-களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரியின் ஆங்கில இலக்கியத் துறையினால் அப்போது நடத்தப்பட்டு வந்த வாய்ஸ் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் என்ற இதழில் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஒருவர் அவரிடம் பயிலும் ஒரு மாணவன் குறித்துக் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். பொதுவாக ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் பேசுவதற்கு நிறைய இருக்கும். ஆனால் அப்போது மாணவர் குறித்த உயர்வான வி­யங்களையும் ஆசிரியர் தயக்கமின்றிப் பேசுவர் என்ற நிலையும் இருந்தது. இது அக்கல்லூரியில் கல்வி ஒரு வாழ்க்கையாக இருந்ததைப் பறைசாற்றியது.

அறிவைப் பரப்ப வேண்டிய ஆசிரியர்கள் அறிவிற்கே முட்டுக்கட்டை ஆகலாமா?

அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் பொறுப்புள்ள பெற்றோர் சேர்க்கத் தயங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் அங்கு ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை என்பதே. இன்றைய உலகமயப் பின்னணியில் ஆங்கில அறிவு வேலைச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. அதனைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களாக அப்பள்ளி மாணவர்கள் இருப்பதால் அவர்கள் மேல் படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர்.

வானம்: சகஜமாகிவிட்ட சமூக அபத்தங்களின் படப்பிடிப்பு

“பொய் சொல்றது ஈஸி, உண்மைய சொல்றது தான் கஷ்டம்”


“இந்த உலகத்தில் இரண்டே ஜாதிதான் உண்டு. ஒன்னு பணக்கார ஜாதி இன்னொன்னு ஏழை ஜாதி”


“இங்க யாரு போலீஸ் யாரு திருடன்னே தெரியல”


இதுபோன்ற வசனங்கள் எங்கும் எவரிடமும் எடுபடும். ஏனெனில் இவை இன்று நிலவும் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை.

கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் அசான்ஜ்

அடக்குமுறைகள், தாக்குதல்கள், பொய் வழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் அசான்ஜ்ஜனநாயக அமைப்பில் அதாவது முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் பத்திரிக்கைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகின்றன. மனித குலத்தின் வளர்ச்சிப் போக்கில் தோன்றிய சமூக அமைப்புகள் அனைத்திற்கும் சில அடிப்படை முழக்கங்கள் இருந்தன. நிலவுடமை அமைப்பில் ஆண்டவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற முழக்கம் இருந்தது.


மாறிவரும் இந்திய வெளிநாட்டுக் கொள்கையும் மாறாத இந்திய இடதுசாரிகளின் பார்வையும்

உலகம் முழுவதிலும் உள்ள ஏறக்குறைய 60 நாடுகளில் ஆட்சியாளர்களின் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் செயல்பாடுகள், போக்குகள் விக்கிலீக்கின் கேபிள் கசிவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளன.


அமெரிக்கா பல நாடுகளின் வி­ஷயங்களில் உள்நோக்குடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் விக்கிலீக் மூலம் அம்பலப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தாத சமச்சீர் கல்வியால் சமச்சீர் வருமா?

அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தையும் அரசுப்பள்ளி ஆசிரியரின் கற்பிக்கும் திறனையும் மேம்படுத்தாமல் கல்வியின் மேம்பாடு குறித்துப் பேசுவது ஏமாற்று வேலையே இந்த ஆண்டு அமல் செய்யப்படவிருந்த சமச்சீர் கல்விக் கொள்கை பதவிக்கு வந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Thursday, April 21, 2011

தமிழ்ச் சமூகத்தை ஒட்டுமொத்தச் சீரழிவிலிருந்து காக்க ஆளும் கட்சியின் தோல்வியை உறுதி செய்வதே ஒரே வழி

தமிழகம் உட்பட 5 சட்ட மன்றங்களுக்கான தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சிகளின் அணிச் சேர்க்கைகள் முடிந்து தேர்தல் அறிக்கைகள் பல்வேறு கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ளன. ஆளும் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு இலவசமாக வெட்கிரைண்டர் அல்லது மிக்சி இந்த முறை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சி அவ்விரண்டினையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு ஆசிய - வட ஆப்பிரிக்க நாடுகளின் எழுச்சி முன்னிறுத்தும் படிப்பினை

சமூக நெருக்கடிகள் கிளர்ச்சிகளை உருவாக்கும் சரியான இலக்கை நோக்கியவையாக அவை ஆக அமைப்பு அவசியம்மதவாதத்தில் மூழ்கி பல வகை பின்தங்கிய போக்குகளின் நிலைக்களனாக விளங்கியதும் உலக நாடுகளின் வளர்ச்சியோடு இணைந்து செல்லாமல் தனித்து விடப்பட்ட தீவுகள் போல் சமூக பொருளாதார கலாச்சார நிலைகளில் பெரும்பான்மை மக்களை வைத்திருந்தவையுமான பல மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்க நாடுகளில் சமீபத்தில் தோன்றி தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜாஸ்மின் புரட்சி என்ற பெயரிலான மக்கள் எழுச்சி சமீபகால வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நாடுகள் அனைத்திலும் மன்னராட்சி அல்லது ராணுவ ஆட்சிகளே இருந்தன. இந்நாடுகளின் ஒட்டுமொத்த மக்கட்தொகை 33.3 கோடி. அதில் 32.5 கோடி மக்கள் வாழும் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட ஆட்சி இல்லை. அந்நாடுகளின் மிக முக்கிய இயற்கை வளம் எண்ணெய் ஆகும்.

நமது நாட்டில் காட்டுத் தீயெனப் பரவிவரும் பாட்டாளிமயமாதல் போக்கைக் கணக்கிலெடுத்து, உரிய வழிகாட்டுதல் வழங்கி வர்க்க விடுதலைச் சாதிக்கப் பாடுபட வேண்டும்


நமது நாட்டில் பட்டாளிமயமாதல் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. சிறு உடமையாளர்கள் அவற்றை விற்றுவிட்டு பட்டாளி வர்க்க அணிகளுடன் சேரும் போக்கு காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மிகப் பெரிய வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பகாசுர வர்த்தக நிறுவனங்கள் சிறிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை அழித்தொழித்துக் கொண்டுள்ளன. அது பட்டாளி வர்க்க அணிகளுடன் உடைமை இழந்தவர்களை அணி சேர்த்துக் கொண்டுள்ளது. விவசாய விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத நிலை, இடுபொருள் விலை உயர்வு, உயர்ந்து வரும் உயர்கல்விச் செலவினங்கள் போன்றவை சிறிய அளவில் விவசாய உற்பத்தியில் ஈடுபடுவோரைப் பொறுத்தவரை விவசாயத்தை முழுமையாக கட்டுபடியாகாத தொழிலாக ஆக்கியுள்ளது. அதனால் அவர்கள் அவர்களின் குண்டுகுறுக்க நிலங்களை விற்றுவிட்டு விவசாயத் தொழிலாளராகவும் உதிரித் தொழிலாளராகவும் மாறிக் கொண்டுள்ளனர். இந்நிலையைப் பயன்படுத்தி நாட்டின் பல இடங்களில் பெரும் பெரும் விவசாயப் பண்ணைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. இப்போக்கை ஊக்குவிக்கும் விதத்தில் அரசு விவசாயத்திற்கு வழங்கிவந்த மானியத் தொகைகளை நிறுத்தி விவசாயத்தை இன்னும் கூட கட்டுபடியாகாத தொழிலாக ஆக்கியுள்ளது. இவற்றின் மூலம் ஏராளமானோர் ஆயிரக் கணக்கில் வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற கடைகளில் வேலை செய்யும் தொழிலாளராகவும் விவசாயப் பண்ணைகளில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளராகவும் மாறியுள்ளனர்.

உலக அளவிலும் இந்தியாவிலும் தொழிலாளர் இயக்கங்கள் எதிர்கொண்டிருக்கும் பின்னடைவுகளும் அதற்கான காரணங்களும்

உலகின் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் தொழிலாளரின் நடைமுறைப் பிரச்னைகளுக்காகவே பாடுபடும் தன்மையைக் கொண்டவையாகவே பல காலமாக உள்ளன. அமெரிக்காவில் ரொனால்டு ரீகனும் இங்கிலாந்தில் மார்க்ரட் தாச்சரும் அறிமுகம் செய்த புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்படும் வரை மேலை நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் ஊதியம் ஒரு சராசரி மனிதனின் சராசரி வாழ்க்கைத் தேவைகளை ஈடுகட்டும் அளவிற்கு இருந்தது. அதனால் தாங்கள் கூலி அடிமைகள் என்ற உணர்வோ அதனைத் தூக்கியயறிய சமுதாய மாற்றம் அவசியம் என்ற எண்ணமோ பரந்த அளவில் தொழிலாளருக்கும் அவர்களை வழிநடத்திய தொழிற்சங்கங்களுக்கும் இருக்கவில்லை.

தொழிலாளர் இயக்கம் மார்க்சியத் தத்துவத்தின் வழிகாட்டுதலின் மூலம் சமுதாய மாற்ற இயக்கமாக உருவானதும் அது எதிர்கொண்ட பிரச்னைகளும்

அன்றாடத் தேவைகளுக்காகப் போராடுவது என்றிருந்த தொழிலாளர் இயக்கம் மார்க்சியத் தத்துவத்தின் வழிகாட்டுதலின் மூலம் சமுதாய மாற்ற இயக்கமாக உருவானதும் அது எதிர்கொண்ட பிரச்னைகளும்
உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கம் மே தினத்தை தனது கடந்த கால செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து படிப்பினைகள் எடுத்து எதிர்கால செயல்பாட்டிற்கான திட்டத்தினை வகுத்தெக்கவே அனுஷ்டிக்கிறது. எந்தத் திட்டத்திற்கும் ஒரு வழிகாட்டும் குறிக்கோள் அவசியம். அந்த அடிப்படையில் மே தினத்தின் குறிக்கோள் உழைக்கும் வர்க்கத்தின் கூலி அடிமைத் தளையினை உடைத்தெறிந்துவிட்டு அதன் விடுதலையைச் சாதிப்பதே.


கல்வி மற்றும் பயிற்று மொழி குறித்த சில கேள்விகள்

அறிவைப் பெறுவது உரிமையாக முடியுமே தவிர; அதனை அரைகுறையாகப் பெற விரும்புவது உரிமையாகாது
நமக்கு வழங்கப்படும் கல்வி குறித்தும் அது வழங்கப்பட வேண்டிய மொழி குறித்தும் பல விஞ்ஞானப் பூர்வமற்றக் கருத்துக்கள் குறிப்பாக இடதுசாரிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்பவர்களால் முன் வைக்கப் படுகின்றன. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு கல்விப் பிரச்னைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தீவிரக் கம்யூனிஸ்ட் கட்சி என்று தன்னை அறிவித்துக் கொள்ளக் கூடிய கட்சியின் ஒரு இளம் தலைவர் உரையாற்றுகையில் கம்யூனிஸ்ட்கள் என்று கூறிக் கொள்ளக் கூடிய சில அமைப்புகளே ஆங்கிலக் கல்வியை ஆதரிக்கின்றன என்று ஏதோ ஆங்கிலம் படிப்பதை ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்ட்களாகவே இருக்க முடியாது என்பது போல் கருத்துத் தெரிவித்தார்.

தில்லுமுல்லுகளின் மொத்த வடிவங்களாக விளங்கும் நமது நியாயவிலைக் கடைகள்விவரம் புரியாதோரால் புகழப்படும் கொடுமை

தேர்தல் பிரச்சாரம் இந்தமுறை பெரும்பாலும் மின்னணு ஊடகங்கள் மூலமாகவே நடைபெறுகிறது. அவ்வகையில் நடைபெறும் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் ஒரு கோடியே 83 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி மாதம் தோறும் வழங்கப்படுகிறது. இது வெளிப்படையாகவே ஏழை எளியவருக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள ஒரு மிகப் பெரும் நிவாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமயநல்லூரில் பகத்சிங் நினைவுதினப் பொதுக்கூட்டம்


தியாகி பகத்சிங்கின் 80-வது நினைவு தினம் சி.டபிள்யு.பி. அமைப்பின் சார்பாக இந்த ஆண்டு மார்ச் - 23 அன்று சமயநல்லூர், ஆலங்குளம், சிவகாசி, ஆனைக்கூட்டம் ஆகிய இடங்களில் தியாகிகள் ஸ்தூபி எழுப்பி அனுஷ்டிக்கப்பட்டது. ஆலங்குளத்தில் மார்ச் - 23 அன்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தோழர் த.சிவக்குமார் (சி.டபிள்யு.பியின் மத்தியக் குழு உறுப்பினர்) சிறப்புரை ஆற்றினார்.


கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் நாகர்கோவில் கூட்டம்

நாகர் கோவில் வருவாய்த் துறை ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டம் ஒன்று 19.03.2011 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்)., சி.எம்.பி., சி.டபிள்யு.பி., எஸ்.யு.சி.ஐ., சி.பி.ஐ(எம்.எல்.கே.என்.ஆர்). போன்ற பல கம்யூனிஸ்ட் கட்சிகளின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதுதவிர அனிலி, இலைகள் இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகளிலிருந்தும் தோழர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முக்கியமான தோழர்கள் பிரசாத், தங்கநாடார், சுலிஸ், மகிழ்ச்சி, ராபின்சன், ஜெபமணி, சுதன், அசன் ஆகியோராவர். தோழர் போஸ் அவர்களின் ஏற்பாட்டில் பல நாள் தயாரிப்புகளுக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கூட்டம் அதன் முதல் நடவடிக்கையாக கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்த விவாதத்தை நடத்தத் தீர்மானித்தது. அந்தச் சிறப்புமிகு பொறுப்பைத் தமிழக முற்போக்கு வாசகர் வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவரும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முற்போக்கு எழுத்தாளருமான தோழர் பொன்னீலனிடம் ஒப்படைத்தது.

Wednesday, April 20, 2011

கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் நாகர்கோவில் கூட்டம்

நாகர் கோவில் வருவாய்த் துறை ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டம் ஒன்று 19.03.2011 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்)., சி.எம்.பி., சி.டபிள்யு.பி., எஸ்.யு.சி.ஐ., சி.பி.ஐ(எம்.எல்.கே.என்.ஆர்). போன்ற பல கம்யூனிஸ்ட் கட்சிகளின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதுதவிர அனிலி, இலைகள் இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகளிலிருந்தும் தோழர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முக்கியமான தோழர்கள் பிரசாத், தங்கநாடார், சுலிஸ், மகிழ்ச்சி, ராபின்சன், ஜெபமணி, சுதன், அசன் ஆகியோராவர். தோழர் போஸ் அவர்களின் ஏற்பாட்டில் பல நாள் தயாரிப்புகளுக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கூட்டம் அதன் முதல் நடவடிக்கையாக கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்த விவாதத்தை நடத்தத் தீர்மானித்தது. அந்தச் சிறப்புமிகு பொறுப்பைத் தமிழக முற்போக்கு வாசகர் வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவரும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முற்போக்கு எழுத்தாளருமான தோழர் பொன்னீலனிடம் ஒப்படைத்தது.

தேனி நகரில் சி.டபிள்யு.பியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்

கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (சி.டபிள்யு.பி) சார்பில் தேனி நகர் பங்களா மேட்டில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 30.01.2011 அன்று நடைபெற்றது. தேனி வட்டாரப் பொறுப்பாளர் தோழர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தோழர்கள் த.சிவக்குமார், சத்தியமூர்த்தி, வரதராஜ் ஆகியோர் உரையாற்றினர். சி.டபிள்யு.பி. அமைப்பின் தென்மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் அ.ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.

இன்றைய முதலாளித்துவம் பராமரிப்பது ஜனநாயக முகத் தோற்றமே தவிர உள்ளடக்கமல்ல


இந்திய அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு சுயேட்சையான அமைப்பு இந்தியத் தேர்தல் ஆணையம். ஜனநாயகத்தின் முதுகெலும்பு என முதலாளித்துவ ஜனநாயகம் கருதும் தேர்தல்கள், சுதந்திரமாக முறை கேடுகளின்றி நடைபெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அது உருவாக்கப் பட்டது.


Tuesday, April 19, 2011

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு அறைகூவல்

- தோழர் கு.கதிரேசன் (பொறுப்பாளர் சி.ஒ.ஐ.டி.யு.)



108 மருத்துவ உதவித் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு பிரபலமான திட்டம். நோய் நொடியினால் அல்லலுற்று நொந்து நூலாகி அரசு மருத்துவமனைகளின் அலைக்கழிப்புப் போக்கினால் அல்லாடி நிற்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கிய திட்டம். நாமும் மனிதர்களே நவீன மருத்துவம் பெறுவதற்கு நமக்கும் உரிமை உண்டு என்ற மக்களின் நம்பிக்கையைப் பெற வாய்ப்புள்ள திட்டமாக இது இருப்பதால் இத்திட்டத்தை எளிதில் அரசு கைவிடாது” .ஓட்டுனர் உரிமம் போன்ற விசேசத் தகுதிகள் பெற்ற பலர் இதில் வேலைக்குச் சேர விரும்பியதற்கு உந்து சக்தியாக இருந்தது மேற்கூறிய இத்திட்டம் குறித்த புரிதலே.

Monday, February 28, 2011

கல்வியின் பால் அக்கறை கொண்ட மக்களின் பிரச்னையாக மாற்றப் படாமல் அமெரிக்கன் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு இல்லை



மீண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதாவது ஏற்கனவே தலைதூக்கி இடையில் நீதிமன்றத் தீர்ப்பினால் மட்டுப்பட்டிருந்த கல்லூரியை மதவாதிகள் கையகப்படுத்தும் பிரச்னை மீண்டும் தலை தூக்கியுள்ளது. கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவர்களைச் செயலராகக் கொண்ட ஆட்சிமன்றக் குழு, மதுரை ராமநாதபுரம் மண்டிலப் பேராயரைத் தலைவராகக் கொண்ட ஆட்சிமன்றக்குழு என இரண்டு ஆட்சிமன்றக் குழுக்கள் தற்போதும் தாங்களே உண்மையான ஆட்சிமன்றக் குழுக்களெனக் கூறிக் கொண்டுள்ளன. அது குறித்த கேள்வி நீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கிறது. அந்நிலையில் பேராயர் தலைமையிலான ஆட்சிமன்றக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் என்று கல்லூரிக் கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருக்கிறார். அதனை ஒட்டியே இப்பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.

ஒரு பொதுத்துறை நிறுவனம் கொள்ளை போவதைக் கண்டுகொள்ளாமல் இருந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் அரசியல் சந்தர்ப்பவாதம்


ஒரு நாட்டின் தொழில்கள் தேசியமயமாக்கப் படுவதற்கும், சமூக மயமாக்கப்படுவதற்கும் இடையில் மிகப்பெரும் வேறுபாடுகள் உள்ளன. உலகின் அனைத்து நாடுகளிலும் ஏதாவது சில தொழில்கள் தேசிய மயமாக்கப் பட்டவையாகவே உள்ளன. அவ்வாறு சில தொழில்கள் தேசிய மயமாக்கப்பட்டு அரசுத் துறையில் இருப்பது அரசாங்கங்களுக்கு அவசியமாகவும் உள்ளது.

மார்ச் - 5 மாமேதை ஸ்டாலின் நினைவு தினம்


மாமேதை லெனின் கூறினார்: நடைமுறை இல்லாத தத்துவம் வறட்டுத் தத்துவம்; தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டு நடைமுறை என்று. தத்துவத்தை அது பகட்டாகத் தங்கியிருந்த தந்த மாளிகையிலிருந்து விடுவித்து இதுவரை இருந்த தத்துவங்கள் எல்லாம் உலகத்தை நடைமுறைகளோடு பொருத்திக் காட்ட மட்டுமே செய்தன; ஆனால் தேவை என்னவென்றால் அதனை மாற்றுவதே எனக் கூறிய மாமேதை மார்க்ஸின் கருத்தை ரஷ்யப் புரட்சியின் மூலம் நிரூபித்ததோடு தத்துவம் நடைமுறை ஆகிய இரு அம்சங்களின் உருவகங்களாகவும் விளங்கியவர்களே மாமேதைகள் லெனினும், ஸ்டாலினும் ஆவர்.

சீருடனும் சிறப்புடனும் நடைபெற்ற சி.டபிள்யு.பி . யின் அமைப்பு மாநாடு




கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்மின்(CWP) அகில இந்திய அமைப்பு மாநாடு நவம்பர் 19, 20, 21ம் தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர். நகர் ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் அகில இந்திய அளவிலான 49 பங்கேற்பாளர்களைக் கொண்ட உள் அரங்க மாநாடு நடைபெற்றது. நவம்பர் 21 ம் நாள் செல்லூர் கண்ணையா முத்தம்மாள் திருமண மண்டபத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. உள்அரங்கில் நடைபெற்ற மாநாட்டினை தோழர் எஸ்.சங்கர் சிங்கும் தோழர் அ.ஆனந்தனும் தலைமையேற்று நடத்தினர். பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கொடியினைத் தோழர் சங்கர் சிங் ஏற்றினார். அதன்பின் சி.டபிள்யு.பி.யின் அகில இந்திய அமைப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அமைப்பு ரீதியான செயல்பாட்டில் ஈடுபட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ள சூழ்நிலையை விளக்கும் அறிக்கை மீதான விவாதம் நவம்பர் 19ம் நாள் நடைபெற்றது.

மூடிக்கிடந்த கண்களைத் திறந்த விக்கி லீக்கும் ராடியா டேப்பும்


அம்பலப்படுத்தும் முதலாளித்துவ அவலங்கள்
சமீபத்தில் டெல்லியில் நடந்ததாக ஒரு செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியது. அதாவது ஒரு கணவன் தனது மனைவியைக் கொன்று அவளது உடலைக் கெடாமல் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டி ஒன்றைக் கடையில் வாங்கி அதில் பல தினங்கள் வைத்திருந்தான் என்பதே அச்செய்தி. இருந்தாலும் கூட அப்பெட்டியிலிருந்தும் துர்நாற்றம் கிளம்புவதை அவனால் தடுக்க முடியவில்லை. அதை வைத்தே அவனைக் கைது செய்து விட்டார்கள்.

ஊழலுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பு


பணம் கொடுத்துப் பெறும் தேர்தல் வெற்றி மூலம் அதைச் சந்திக்கத் தயாராகும்
ஆளும் கட்சியும் அதனை எதிர்கொள்ள வழி தெரியாது திணறும் எதிர்க் கட்சியும்
2010ம் ஆண்டு ஊழல், மோசடிகளின் ஆண்டு என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படுகிறது. அத்தனை ஊழல்கள் இந்த ஆண்டில் மட்டும் நிகழ்ந்துள்ளன. காமன் வெல்த் விளையாட்டு மைதானம் அமைப்பதில் ஊழல், இராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டி முறைகேடாக ஒதுக்கீடுகள் செய்ததில் ஊழல், தனது உறவினர்களுக்கு முறைகேடாக அரசுக்குச் சொந்தமான இடங்களை வழங்கியதில் கர்நாடகாவின் எடியூரப்பா செய்துள்ள ஊழல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வீடுகளை மந்திரிகளின் சொந்தக்காரர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒதுக்கி தமிழக அரசின் வீட்டுவசதி வாரியம் செய்துள்ள ஊழல் என எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை நிதர்சனமாகிவிட்ட நிலை நிலவுவதால் இந்த ஆண்டையே ஊழல், மோசடிகள் நிறைந்த ஆண்டாக ஊடகங்கள் வர்ணிப்பதில் தவறேதுமில்லை.

பிப்ரவரி 27 தியாகி சந்திர சேகர் ஆசாத்தின் நினைவு நாள்



இந்திய மண்ணின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த தியாகி சந்திர சேகர் ஆசாத்தின் நினைவு நாள்

அவரது உன்னத வாழ்க்கையை நினைவு கூர்கிறது மாற்றுக்கருத்து
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்களது அளப்பரிய தியாகங்களால் மின்னும் நட்சத்திரங்களாக விளங்கியவர் பலர் இருந்தனர். அவர்களில் சிலரது தியாகங்கள் யாராலும் மறைக்கவியலாதவாறு பிரபலம் பெற்றன. ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் தூக்கிலிடுதல் போன்ற கொடூர நடவடிக்கைகளால் அத்தகைய பிரபலத் தன்மை அவர்களது வரலாற்றிற்குக் கிட்டியது. அந்த ஒளிப் பிரவாகத்தில் கூசிப் போன கண்களுக்கு அதையொத்த பல தியாக வரலாறுகள் அவ்வளவு தூரம் புலப்படாது போய்விட்டன. அத்தகைய மகத்தான மறைக்கப்பட்ட தியாக வரலாறுகளில் ஒன்றுதான் தியாகி சந்திர சேகர் ஆசாத்தின் வரலாறாகும்.
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் செயல்பட்ட ஹிந்துஸ்தான் சோ­லிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மி என்ற அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவராக விளங்கியவர் சந்திர சேகர் ஆசாத் ஆவார். தனது 15,ஆவது வயதில் அதாவது பள்ளிப் பருவத்திலேயே ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டமைக்காகக் கைது செய்யப்பட்ட சந்திர சேகர் சீத்தாராம் திவாரி, நீதிமன்ற விசாரணையின் போது தனது இயற்பெயரைத் துறந்து தனக்குத் தானே ஆசாத் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். விடுதலை என்ற பொருள் கொண்ட அப்பெயரை உச்சரித்ததற்காக வெள்ளை நீதிமன்றம் அவருக்கு விதித்த 15 சவுக்கடிகள் என்ற தண்டனையை ஒவ்வொரு அடி அவர் மேல் விழுந்த போதும் பாரத அன்னை வாழ்க! என்ற முழக்கத்துடன் அதனை எதிர் கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் காந்தியடிகளால் இடையில் நிறுத்தப்பட்டது விடுதலைப் போரில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய பலரைப் பயங்கரவாத நடவடிக்கைகள் பக்கம் தள்ளியது. அவ்வாறு தள்ளப்பட்டவரில் ஆசாத்தும் ஒருவர்.

கல்விக்கட்டண உயர்வினை எதிர்த்த இங்கிலாந்து மாணவர் போராட்டம்:



சளைக்காத மாணவர் இயக்கத்தின் முன் பலிக்காமல் போன ஆட்சியாளரின் தந்திரங்கள்
பிரான்ஸையே உலுக்கி எடுத்த உழைப்பாளர் மற்றும் மாணவர் போராட்டங்கள் ஓய்ந்தது போல் காட்சியளித்தாலும் நீறுபூத்த நெருப்பாக இருந்து கொண்டுள்ளன. அந்நிலையில் லண்டன் மாநகரையே இங்கிலாந்து நாட்டின் மாணவர் போராட்டங்கள் உலுக்கி எடுத்துக் கொண்டுள்ளன. இது ஐரோப்பாக் கண்டமே ஒரு வகையான மகத்தான எழுச்சியினால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கார் திரைப்படம் - ஒரு திறனாய்வு




முழுக்க முழுக்கக் கற்பனை அடிப்படையில் எழுதப்படும் கதைகளுக்கும் எடுக்கப்படும் திரைப் படங்களுக்கும் சில வரலாற்றுப் பாத்திரங்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளுக்கும் எடுக்கப்படும் திரைப் படங்களுக்கும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. அதாவது கற்பனைக் கதைகளை எழுதுபவருக்கும், திரைப்படமாக எடுப்பவருக்கும் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்துக் கதையைக் கையாள்பவருக்கு இருப்பதைக் காட்டிலும் கூடுதல் சுதந்திரம் உண்டு. அதாவது அவர் விரும்பினால் கதையை அவர் விரும்பும் விதத்தில் மாற்றிக் கொள்ள முடியும்.

Sunday, February 27, 2011

ராசாவின் பதவி விலகலும் கபில் சிபலின் பொறுப்பேற்பும் மன்மோகன் சிங் அரசால் ஊழலை மூடிமறைக்க அரங்கேற்றப்பட்டதொரு ஓரங்க நாடகம்



நான் அடிப்பது போல் அடிக்கிறேன், நீ அழுவதுபோல் அழு என்பது நமது ஆட்சியாளர்களின் நடவடிக்கை ஆகிவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டதில் நடத்த ஊழல் இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரி மூலம் வெளிவந்தவுடன் அதனால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஊடகங்கள் மூலமும் வந்த விமர்சனங்களின் விளைவாகத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசா பதவி விலக நேர்ந்தது. அவர் வகித்த தொலைத் தொடர்பு அமைச்சகம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.